பக்கங்கள்

بسم الله الرحمن الرحيم الحمدلله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته بارك الله بكم و سدد خطاكم

அன்பு நண்பர்களுக்கு.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. எனக்கு மிக்க மகிழ்ட்சி நீங்கள் என் இணையதளத்திர்க்கு வந்ததற்கு - அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்

மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்
மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

நோன்பு எனும் இறைத்தேர்வில் எனது தக்வா-சுயபரிசோதனை...

 

📚 أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 📚

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

♣ ஏப்ரல் – 2023 –07 – ந் தேதி ஹிஜ்ரி–1444 – [رمضان]  ரமலான்    மாதம் – 15–ம் தேதி  மூன்றாம் வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை வெளியீட்டு எண்: 181 [டிஜிடல் முறை - 25]  ♣

Download PDF OLD

Download PDF new

களக்காடு-மாநகர-உலமாக்கள்-20170412_060322.jpg.jpg

بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز; {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ۞ ‌ۖ‏‏‏} -[سورة البقرة2 - عدد آياتها(183) ] - صدق الله العظيم / قال رسول الله ﷺ «وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ " مُتَّفَقٌ عَلَيْهِ. » .."‏ ‏ »‏‏ [إلخ], الى آخره, (رَوَاهُ البخاري (8)، ومسلم (16).] [ أو كما عبر الرسول صلى الله عليه وسلم

✍🏻✍🏻 ஜுமுஆ குறிப்புரையின் தலைப்பின் விளக்கம்:- நோன்பு எனும் இறைத்தேர்வில் எனது தக்வா-சுயபரிசோதனை....!!!  அதாவது:- நாம் ரமலான் மாதத்தின் 30 நாட்களும், நோன்பு எனும் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறோம். அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவராக உள்ளோமா ? அல்லது தேர்வராக உள்ளோமா ? என தனக்குத்தானே சீர்திருத்தம் செய்து சுயப்பரிசோதனை. செய்தல்    சம்பந்தமாக‌ “ஜுமுஆ குறிப்புரை”   . 

துவக்கவுரை: المقد مة INTRODUCTION :-

✍🏻 அன்புள்ளவர்களே ல்லாஹ்வின் பேரருளால்  [ رمضان  ]   மளான் மாதத்தின் மூன்றாம்  வார ஜுமுஆவில்  , இறைவனுக்கும் பிடித்தமான நோன்பை நோற்ற நோன்பாளியாகவும், இறைவனுக்கும் பிடித்த இல்லமான இறையில்லத்திலும் அமர்ந்திருக்கிறோம், ல்ஹம்துலில்லாஹ். 

✍🏻 அன்புள்ளவர்களே! இன்றோடு சேர்த்து 15 நாட்கள் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்திருக்கிறோம்.  நாம் இதுவரைக்கும் வைத்த அனைத்து நோன்புகளையும், அமல்களையும், அல்லாஹ் அங்கிகரிப்பானாக! ஆமீன். 

இன்னும்  மீதமுள்ள எல்லா நோன்புகளையும், இதர வணக்க, வழிபாடுகளையும், எவ்வித தடங்கல் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!. என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.

✍🏻 அன்புள்ளவர்களே! ரமலானின் முதல் பத்தான ‘ரஹ்மத்‍துடைய பத்தை நிறைவு செய்துவிட்டோம். ரமலானின் இரு பகுதிகளில் முதற் பகுதியான 15- நோன்பை இன்றோடு நிறைவு செய்கிறோம். இன்னும் பாதி நாட்கள் / கொஞ்ச நாட்கள்தாம் உள்ளன ரமலான் முடிய. ஆக மீதியுள்ள நாட்களை பயனுள்ள நாட்களாக ஆக்கிட முயற்ச்சி செய்வோமாக !

ரமலானின் இரண்டாம் பத்தான ‘மக்ஃபிரத்’ எனும் பாவமன்னிப்புடைய பத்துவின்  நடுப்பகுதியில் உள்ளோம். அல்லாஹ்விடத்தில் அதிகமாக اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَخَطَايَانَا كُلَّهَا يا رَبَّ العـالَمـين، என்ற துஆவை அதிகமாக ஓதி கொள்வோமாக !. டுத்தாக 

✍🏻 அன்புள்ளவர்களே!  இன்றைய ஜுமுஆ‍வுடைய‌ பேருரையில் :-

நாம் ரமலான் மாதத்தின் 30 நாட்களும், நோன்பு எனும் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறோம். அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவராக உள்ளோமா? அல்லது தேர்வராக உள்ளோமா ? என தனக்குத்தானே சீர்திருத்தம் செய்து சுயப்பரிசோதனை. செய்தல் சம்பந்தமாக‌   இன்றைய ஜுமுஆ உரையில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்……

✍🏻 பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும், கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன்  ﷻ  நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன்  ✍🏻  என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.

♣ அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-  قال الله تعالى ♣

【ஆசிரியரின் குறிப்புஅன்புள்ள உஸ்தாதுகளே!! தாங்கள் ஜுமுஆ பேருரையாற்றும் போது; கீழுள்ள‌ குர்ஆன் வசனங்களை ஓதும் போது கிராஅத்தாக ஓதுங்கள்.

 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் [அல்குர்ஆன் 2:183]

நபி  அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم ♣

روى البخاري (1904) ومسلم (2119) عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ هُوَ لِي وَأَنَا أَجْزِي بِهِ  . . . الحديث ) .

"நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!'" என அல்லாஹ் கூறுகின்றான். روى البخاري (1904) ومسلم (2119)

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ يَقُولُ اللَّهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلأٍ ذَكَرْتُهُ فِي مَلأٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَىَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَىَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً ‏"

என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன். [ஸஹிஹ் புஹாரி 7405] 

[பாவமன்னிப்பு செம்ம OFFER ஆஃப்பர்:-]

✍🏻 அன்புள்ளவர்களே நாம் ரமலானுக்கு டிரஸ் எடுக்க போரோம். அங்கு ஒரு ஆடைக்கு, ஒரு ஆடை ஃப்ரினு சொன்ன எப்படி கடையில கூட்டம் அலை மோதுமோ? அது போல; ரப்புல் ஆலமீன் நம்முடைய பாவங்களை மன்னிக்க ஒரு ஆஃப்பராக இந்த மாதத்தை தந்துள்ளான். ஆக நாமும் அக்காலங்களை பயன்படுத்தி பாவ மன்னிப்புக்களை பெற முயற்சிக்க வேண்டும்.

عَنْ جَابِرٍؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً لاَ يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْاَلُ اللهَ خَيْرًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَاْلآخِرَةِ إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ وَذلِكَ كُلَّ لَيْلَةٍ.

“நான் நபி அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது. அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளைக் கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவுகளிலுமாகும்” என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَي كُلَّ لَيْلَةٍ إِلَي سَمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقي ثُلُثُ اللَّيْلِ اْلآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْاَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ له؟

ஒவ்வொரு இரவிலும் மூன்றிலொரு பகுதி எஞ்சியிருக்கும்போது நம்முடைய இரட்சகன் உலக வானத்திற்கு இறங்கி, என்னிடம் துஆக் கேட்பவர் யார்? அவர் துஆவை நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் கேட்ப்பவர் யார்? நான் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்பவர் யார்? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன்” என்று கூறுகிறான், என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 1125)

[இரண்டாம் பத்தான 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புடைய பத்து நாட்கள்:-]

✍🏻 அன்புள்ளவர்களேமகத்துவம் நிறைந்த புனித ரமலானுக்கு ‘பாவமன்னிப்பு தேடப்படும் மாதம்’ என்ற சிறப்பும் உண்டு.

ஒரு நோன்பாளி தான் அறிந்தோ-அறியாமலோ, தெரிந்தோ-தெரியாமலோ, வெளிப்படையாகவோ- மறைமுகமாகவோ, மனம் விரும்பியோ-விரும்பாமலோ செய்த சிறிய, பெரிய தவறுகளுக்கும், பாவங்களுக்கும் கண்டிப்பாக பாவமன்னிப்பு கோர வேண்டும்.

மேலும் முஸ்லிம்களாக இறந்து போன பெற்றோர், உற்றார், உறவினர், அண்டை அயலார், சகோதர - சகோதரியர், தற்காலத்தில் வாழும் உலக முஸ்லிம்கள், காலம் கடந்து சென்ற முஸ்லிம்கள் என அனைவருக்கும் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேட வேண்டும்.

பாவமன்னிப்புத் தேடுவதற்கு நேரமோ, காலமோ, கிழமையோ, மாதமோ குறிக்கப்படவில்லை. பாவமன்னிப்பு எப்பொழுதும் தேடலாம். எனினும் புனித ரமலான் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவமன்னிப்பு வேண்டுவதற்கும் ஒரு விசேஷமான மாதமாகும். எனவே இந்த புனித ரமலானில் கூடுதலாக கவனம் செலுத்தி அதிகமாக பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.

ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள ‘இரண்டாவது பத்து’ பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவங்கள் மன்னிக்கப்படும் பகுதியாகவும் அமைந்துள்ளது. எனவே ரமலான் காலத்தில் முடிந்தளவு நோன்பாளிகள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று புண்ணியங்கள் தேடி புறப்பட்டு, புது மனிதர்களாகவும், புனிதர்களாகவும் மாற்றம் பெற வேண்டும்.

புனித ரமலான் மாதம் முழுவதும் பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நாட்களாக உள்ளது. 

பொதுவான மனிதன், சிலவேலை பாவங்களை தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யக்கூடியவனாகவே இருக்கின்றான். ஆதலால் அல்லாஹுத்தஆலா தன்அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். மேலும், அப்படி பாவமன்னிப்பு வேண்டுபவர்களை தான்விரும்புவதாகவும் அல்குர்ஆனிலே பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்;

اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏ (البقرة : 222)

“நிச்சயமாக அல்லாஹுத்தஆலா பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கின்றான். இன்னும், தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்பகரா 222)

وَهُوَ الَّذِىْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِه وَيَعْفُوْا عَنِ السَّيِّاٰتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَ (الشورى : 25)

”அவன்தான் தன் அடியார்களின் பாவமன்னிப்பு கோறுதலை ஏற்றுக்கொள்கின்றான், அவர்களின் குற்றங்களை மன்னிக்கின்றான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.” (அஷ்ஷுறா 25)

ஸஹர் நேரத்தில்…

وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ

அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள் (அல்குர்ஆன் 51:18)

اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ‏

(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்]  (அல்குர்ஆன் 3:17)

இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வலியுறுத்தியுள்ளார்கள்.

புனித ரமலானில் அதிகமாக பாவமன்னிப்பு தேடுதல், துஆ பிரார்த்தனைகள் செய்தல்.

عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ. 

ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் பாவம் செய்பவர்களே! பாவம் செய்பவரில் சிறந்தவர் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்பவர்” (திர்மிதீ 2499)

-عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍؓ يَقُولُ: قَالَ النَّبِيُّ ﷺ: طُوبَي لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اِسْتِغْفَارًا كَثِيرًا

தன் அமல்களின் பட்டோலையில் (கியாமத் நாளன்று) அதிகமாக பாவமன்னிப்புத் தேடுவதை பதிவு செய்யப்பட்டிருக்கும் மனிதருக்கு சுபச் செய்திகள்”  (இப்னு மாஜா 3818 )

 عَنْ أَبِي بَكْرِنِ الصِّدِّيقِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا أَصَرَّ مَنِ اسْتَغْفَرَ وَإِنْ عَادَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً

தன் பாவங்களுக்கு மன்னிப்புத் தேடிக்கொண்டிருப்பவர் பாவங்களில் நிலைத்திருப்பவராகக் கருதப்படமாட்டார். ஒரு நாளைக்கு அவர் எழுபது முறை பாவம் செய்தாலும் சரியே” (அபூதாவூத் 1514)

عَنِ الزُّبَيْرِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ أَحَبَّ أَنْ تَسُرَّهُ صَحِيفَتُهُ فَلْيُكْثِرْ فِيهَا مِنَ اْلاِسْتِغْفَارِ

எவருடைய அமல்களின் பட்டோலை (கியாமத் நாளில்) தன்னை மகிழ்விக்க வேண்டுமென விரும்புபவாரோ அவர் அதிகமாக பாவமன்னிப்புத் தேடவும்”  ( والبيهقي في ((شعب الإيمان)) (648)،)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ 

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஒருமுறை ரஸூல்  அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!!  என்று கூறினார்கள். (வழமைக்கு மாறாக) இன்று ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், (கீழ்வருமாறு) பதில் கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் மூன்று விடயங்களைக் கூறினார்கள்.

யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன். [திர்மிதீ, அஹ்மத்] 

ரமழான் மாதம் பாவ மன்னிப்புக்குரிய மாதமாகும். இதில் பல சந்தர்ப்பங்களிலும் பல நேரங்களிலும் அல்லாஹ் லட்சக்கணக்கான மக்களை மன்னிக்கிறான். உதாரணமாக - ஒவ்வொரு நாளும் இப்தாரின்போது, லைலதுல் கத்ர் இரவில்.  எனவே மாதம் முழுவதும் எல்லா நேரங்களிலும் நிறைய பாவ மன்னிப்பு தேட வேண்டும்.

[முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி அவர்கள் 'மக்ஃபிரத்'  பாவமன்னிப்பு தேடியது:-]

✍🏻 அன்புள்ளவர்களே!    முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி அவர்கள் ஒரு நாளில் 100  /  எழுபது தடவைக்கு மேல் பாவமன்னிப்பு தேடியுள்ளார்கள். அப்பரம் அனு தினமும் பாவத்திலே முழ்கி இருக்கும் நாம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை பாவமன்னிப்பு தேட வேண்டும். என்பதனை கொஞ்சம் சிந்தியுங்கள்?.

لِّيَـغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَ مَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ‏

அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.

6307- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ وَاللَّهِ إِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.: புகாரி-6307

7033 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِىُّ جَمِيعًا عَنْ حَمَّادٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَبِى بُرْدَةَ عَنِ الأَغَرِّ الْمُزَنِىِّ – وَكَانَتْ لَهُ صُحْبَةٌ – أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِى وَإِنِّى لأَسْتَغْفِرُ اللَّهَ فِى الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ

எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். : முஸ்லிம்-5234 (4870)

7034 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ أَبِى بُرْدَةَ قَالَ سَمِعْتُ الأَغَرَّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- يُحَدِّثُ ابْنَ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّى أَتُوبُ فِى الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ

“மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்-5235 (4871)

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது.  இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும். ஆதலால் இன்றே பாவமன்னிப்பு தேடுவோம்.. இந்த பாவமன்னிப்பிற்க்குறிய 10 நாட்களை பயனுள்ளதாக்கிடுவோமாக ! ஆமீன்,

[இரண்டாம் பத்தான 'மக்ஃபிரத்' எனும் பத்தை வீணாக்கியவர்களின் நிலை:-]

✍🏻 அன்புள்ளவர்களே!  நபி  அவர்களால் ‘நாசமாகட்டும்’ என்று சபிக்கப்பட்டவர்கள் யாரென்று தெரிவோமா?

கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு,  நபி அவர்கள், இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள். தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை.

தாயிப் நகரத்து மக்களுக்கு, இஸ்லாத்தை எடுத்தியம்புவதற்காக  சென்றபோது, சொல்லொனா துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிறுவர்களை ஏவி கல்லால் அடிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, தாயிஃபை அடுத்து ஒரு தோட்டத்திலே, உடல் எல்லாம் இரத்தம் வழிந்தேட அம்ர்ந்திருக்கும்போது, இறைவனின் கட்டளையின் பேரில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபி அவர்கள் முன் தோன்றி, மிகப்பெரிய இரண்டு மலைகளையும் ஒன்றாக இணைத்து, இந்த மக்களை அதிலே நசுக்கிவிடவா என்று கேட்டார்கள். அப்போதுகூட மாநபி அவர்கள், ‘வேண்டாம் இவர்கள் இல்லை என்றாலும் இவர்களின் சந்ததியினர் ஓரிறைவனை வணங்கக் கூடியவர்களாக் வருவார்கள்’ என்று சொல்லி, தாயிஃப் நகர மக்களின் மீது கருனையை பொழிந்தார்கள்.

பத்ருப்போரில் பிடிபட்ட போர்க் கைதிகளை, உயிரோடு விடக்கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் உட்பட சொன்னபோது,  ஒவ்வொரு கைதியும் பத்து சிறுவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்கள்.

மக்கத்து வெற்றியின்போது, தன்னை இந்த மண்ணில் இருந்து விரட்டியடித்தவர்களை, இன்று உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை, அபூ ஸுஃப்யானின் வீட்டில் தஞ்சம் அடைந்தவர்களுக்கும் பாதுகாப்பு என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்களே தவிர அவர்களை சபிக்கவில்லை.

இப்படியாக இந்த உம்மத்தினர்மீது கருணையை பொழிந்த நபி அவர்கள், ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சிலரை சபித்துள்ளார்கள். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம்தான் ரமழானை அடைந்து பாவமன்னிப்பு பெறாதவர். ரமழான் மாதம் பாவமன்னிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை கீழ்கண்ட ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

وَعَنْهُ] عَنْ أَبِي هُرَيْرَةَ  قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكبر أَو أَحدهمَا فَلم يدْخلَاهُ الْجنَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஒருமுறை ரஸூல்  அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!!  என்று கூறினார்கள். (வழமைக்கு மாறாக) இன்று ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், (கீழ்வருமாறு) பதில் கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் மூன்று விடயங்களைக் கூறினார்கள்.

யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும் என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

பின்னர், ‘யார் பெற்றோர் இருவரையும், அல்லது அவ்விருவரில் ஒருவரை அடைந்துகொண்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவரும் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

‘உங்களுடைய பெயர் சொல்லக்கேட்டு, உங்கள் மீது யார் ஸலவாத்துச் சொல்லவில்லையோ அவரும் அழிந்து நாசமாகட்டும்’ என்றார். அதற்கும் ‘ஆமீன்’ என்றேன். [திர்மிதீ, அஹ்மத் Mishkat al-Masabih 927 ] 

ஆகையால், இறைவன் நம் அனைவரையும் சபிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்காமல்,  பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்கி அருள வேண்டும்.  அதற்காக வரக்கூடிய புனித மிக்க ரமழான் மாதத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

[இரண்டாம் பத்தில் அதிகமாக ஓதிடுவோம் :-] 

✍🏻 அன்புள்ளவர்களே  நாம்  ரமலானின்  இரண்டாம் பத்தில் இருப்பதினால்;   ரமலானின் இரண்டாம் பத்து நாட்களில்  ஓத வேண்டிய துஆவை அதிகமாக ஓதிடுவோமாக!.

اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَخَطَايَانَا كُلَّهَا  يا رَبَّ العـالَمـين،

Allahum Maghfirlana Zunubana Wa Qatayana Kullaha Ya Rabbal Aalameen"

அல்லாஹும் மக்பிர்லனா துனுபனா வ கத்தாயானா குல்லஹா யா ரப்பல் ஆலமீன்”

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. [இப்னு குஜைமா பாகம் 3 எண் 191]  

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு  இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

[ஒரு சொட்டு கண்ணிர் ரப்புக்கு பிடிக்கும்:-]

✍🏻 அன்புள்ளவர்களே    இப்பாவ மன்னிப்பு நிறைந்த 2 ம் பத்தில் இருக்கின்ற நாம் மனமுறுகி ஒவ்வொரு நேரமும் பிரார்திக்க வேண்டும்.

நாம் துஆ கேட்கும் போது அழுது துஆ கேட்க்க வேண்டும். இல்லையென்றால் அழுவதைப்போல பாசங்கு செய்ய வேண்டும்.

، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ قَطْرَةٌ مِنْ دُمُوعٍ فِي خَشْيَةِ اللَّهِ وَقَطْرَةُ دَمٍ تُهَرَاقُ فِي سَبِيلِ اللَّهِ ‏.‏ وَأَمَّا الأَثَرَانِ فَأَثَرٌ فِي سَبِيلِ اللَّهِ وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللَّهِ ‏"‏ ‏.‏‏(‏‏(‏رواه الترمذي‏.‏وقال ح حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏‏)‏‏)‏‏ .

இரண்டு துளிகள் இரண்டு அடையாளங்கள் ஆகியவற்றைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது எதுவும் இல்லை.1 அல்லாஹ்வுக்கு பயந்து வடிக்கும் கண்ணிர் துளிகள். அல்லாஹ்வின் வழியில் சிந்திய ரத்த துளிகள். [திர்மிதி 1669]

كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلاَ تَبْكِى وَتَبْكِى مِنْ هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ ». قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ ». قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ يُوسُفَ

உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்குச் சென்றால் தனது தாடி நினைகின்ற அளவிற்கு அழுவார்கள். சொர்க்கம் நரகத்தைப் பற்றி சொல்லப்படும் போது நீங்கள் அழுவதில்லை. ஆனால் இதற்காக (மண்ணறைக்கு வந்தால்) அழுகிறீர்களே என்று அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மண்ணறை என்பது மறுமையில் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் அடியான் தப்பித்துவிட்டால் இதற்குப் பின்பு உள்ள (நிலை) இதை விட இலகுவாக இருக்கும். இதில் அவன் வெற்றிபெறவில்லையானால் இதற்குப் பிறகுள்ள (நிலை) இதை விட கடுமையாக இருக்கும். மண்ணறைகளில் (நடக்கும்) காட்சியை விட மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் பார்க்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதீ-2308 (2230)

[புனித ரமலானில் நம்முடைய‌ ஜகாத் / ஸதகா அமல் ஓர் பரி சோதனை:-]

[ஏழைகளுக்கு உதவு. இறைவனை காணலாம்:-]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِن الله عز وَجل يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ قَالَ: أَمَّا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي قَالَ: يَا رَبِّ كَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي؟ يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ أما إِنَّك لَو سقيته لوجدت ذَلِك عِنْدِي ". ‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?" என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்" என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.

மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை" என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான். [முஸ்லிம் 5021].

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! மகத்தான நன்மையுடைய தர்மம் எது?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முடைய தந்தைமீது அறுதியாக! அது குறித்து நிச்சயம் உமக்கு விளக்கமளிக்கப்படும். நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சியவராகவும் நீண்டநாள் வாழவேண்டுமென எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது, நீங்கள் செய்யும் தர்மமே (மகத்தான நன்மை தரக்கூடியதாகும்). உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்)" என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்! (ஏனெனில்,) அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிருக்கு உரியதாகிவிட்டிருக்கும்" என்று பதிலளித்தார்கள். [முஸ்லிம் 1871]

[முகஸ்துதிக்காக நோன்பு வேண்டாம். சதக்காவும் வேண்டாம் :-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

✍🏻 அன்புள்ளவர்களே! நம்முடைய நோன்பும், ஸதகாவும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும் பிறரின் புகழ், பெருமைக்காக செலவு செய்தால் ஒரு கூலியும் கிடைக்காது.

தங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை காயப்படுத்துபவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ‌ؕ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏

விசுவாசிகளே! நீங்கள் உங்களுடைய தர்மத்தை (ப் பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு ஒப்பாவான். அவனுடைய உதாரணம்; ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதை (க் கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)

ஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில் ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்று விடுவதுபோல அழித்து விடுகிறது. புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.

(وَمَا تُنْفِقُوْنَ اِلاَّ ابْتِغَاءَ وَجْهِ اللهِ۞).

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கேயன்றி (பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். (அல்பகரா:272)

[முகஸ்துதியி (புகழ்விரும்புதலி)ன் இழிவு :-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

شَدَّادِ بْنِ اَوْسٍؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ صَلَّي يُرَائِيْ فَقَدْ اَشْرَكَ، وَمَنْ صَامَ يُرَائِيْ فَقَدْ اَشْرَكَ، وَمَنْ تَصَدَّقَ يُرَائِيْ فَقَدْ اَشْرَكَ

மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தொழுதாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார், மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் நோன்பு நோற்றாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார், மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தர்மம் செய்தாரோ, அவர் நிச்சயமாக இணைவைத்துவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)

தெளிவுரை:- எவர்களுக்குக் காட்டவேண்டுமென்பதற்காக அமல் செய்தாரோ, அவர்களை அல்லாஹுதஆலாவுக்கு இணையாக ஆக்கிவிட்டார். இந்நிலையில் இந்த அமல்கள் அல்லாஹுதஆலாவுக்காக இல்லாமல் எவர்களுக்கு காட்டவேண்டும் என்று செய்தாரோ அவர்களுக்காக ஆகிவிடுகிறது. இதைச் செய்தவர் நன்மைக்குப் பதிலாக வேதனைக்கு உரியவராகிவிடுகிறார் என்பதாம்.

عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ اَوَّلَ النَّاسِ يُقْضي يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ، رَجُلٌ اُسْتُشْهِدَ،فَاُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعْمَتَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيْكَ حَتَّي اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ جَرِيْءٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ فَسُحِبَ عَلي وَجْهِهِ حَتَّي اُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَاَ الْقُرْآنَ، فَاُتِيَ بِهِ، فَعَرَّفَهُ نِعَمَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ وَعَلَّمْتُهُ وَقَرَاْتُ فِيْكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ وَلكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ، وَقَرَاْتَ الْقُرْآنَ لِيُقَالَ هُوَ قَارِئئٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ فَسُحِبَ عَلي وَجْهِهِ حَتَّي اُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ وَاَعْطَاهُ مِنْ اَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَاُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيْلٍ تُحِبُّ اَنْ يُنْفَقَ فِيْهَا اِلاَّ اَنْفَقْتُ فِيْهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ هُوَ جَوَادٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ، فَسُحِبَ عَلي وَجْهِهِ، ثُمَّ اُلْقِيَ فِي النَّارِ.

கியாமத் நாளில், முதன்முதலாக தனக்குப் பாதகமான தீர்ப்பை பெறுபவர்களில் அல்லாஹ்வுடைய பாதையில் உயிரிழந்தவரும் ஒருவர், அல்லாஹுதஆலாவுக்கு முன் அவரைக் கொண்டுவரப்படும், அவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துக் கூறுவான், அவரும் அதை ஒப்புக் கொள்வார்.இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன செய்தாய்?” என்று அல்லாஹுதஆலா கேட்பான். நான் உன்னுடைய பொருத்தத்திற்காகப் போரிட்டு உயிரிழந்தேன்” என்பார். நீ பொய் சொல்கிறாய், மக்கள் உன்னை வீரனேன்று சொல்லவேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய், அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்று அல்லாஹுதஆலா கூறுவான். பிறகு அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசியெறியப்படுவார். இரண்டாவது மனிதர், மார்க்கக் கல்வி கற்று பிறருக்கும் கற்பித்தவர். மேலும், குர்ஆன் ஓதியவர், அவர் அல்லாஹுதஆலாவின் முன் கொண்டுவரப்படுவார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துரைப்பான், அவரும் ஒப்புக்கொள்வார். இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன வேலை செய்தாய்?” என அல்லாஹுதஆலா அவரிடம் கேட்பான். நான் உனது பொருத்தத்திற்காக மார்க்கக் கல்வி கற்று, பிறருக்கும் கற்பித்தேன், உனது பொருத்தத்திற்காகவே சிறப்புமிகு குர்ஆனை ஓதினேன்” என்பார் அவர். நீ பொய் சொல்கிறாய்! மக்கள் உன்னை ஆலிம் என்று சொல்லவேண்டும் என்பதற்காக இல்மைக் கற்றாய். மக்கள் உன்னை காரீ என்று சொல்ல வேண்டும் என்பதற்காக குர்ஆனை ஓதினாய், அது அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்பான். பிறகு, அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகில் தூக்கியெறியப்படுவார். மூன்றாவது மனிதர் செல்வந்தர், அவருக்கு அல்லாஹுதஆலா உலகில் மிகுந்த செல்வம் கொடுத்திருந்தான், மேலும், அனைத்து வசதிகளையும் வழங்கியிருந்தான், அவர் அல்லாஹுதஆலாவுக்கு முன் கொண்டுவரப்படுவார். அவருக்கு கொடுக்கப்பட்ட பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துக் கூறுவான். அவர் அதை ஒப்புக் கொள்வார். இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன வேலை செய்தாய்?” என அல்லாஹ் கேட்பான், நீ செலவழிக்கச் சொன்ன வழிகளிலெல்லாம் நீ கொடுத்த பொருளை உன் பொருத்தத்திற்காகச் செலவிட்டேன்” என்று சொல்வார். நீ பொய் சொல்கிறாய் மக்கள் உன்னைக் கொடை வள்ளல் எனச் சொல்லவேண்டும் என்பதற்காக நீ செலவழித்தாய், அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்பான். பிறகு அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசியெறியப்படுவார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ قَيْسِ نِ الْخُزَاعِيِّؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ قاَمَ رِيَاءً وَسُمْعَةً لَمْ يَزَلْ فِيْ مَقْتِ اللهِ حَتَّي يَجْلِسَ.

பிறர் பார்க்க வேண்டும் அல்லது புகழ் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு எவர் நல்ல காரியத்தில் ஈடுபடுவாரோ, அவர் அந்த எண்ணத்தை விடாதவரை அல்லாஹுதஆலாவின் கடும் வெறுப்புக்கு ஆளாகி இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் குஸாயீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தப்ஸீர் இப்னுகஸீர்)

[ரமலானில் ஜகாத்:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வை அன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள். [9:18]

اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ‏

நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். [5:55.]

[ஜகாத் பெற தகுதிகள்:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். [9:60.]

[தொழுகையைப் பேன்றே ஜகாத்தும் மிக முக்கிய கடமை:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

ஒருவர் தொழுகிறார். அவர் மீது ஜகாத் கடமையாக இருந்தும் நிறைவேற்றவில்லை எனில் அவரது தொழுகையை அல்லாஹ் ஒப்புக்கொள்ள மாட்டான் என முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள். நான் சேர்த்த்து வைத்தை பிரிக்க நீ யார் என அல்லாஹ் கேட்பதாக அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.

[ஜகாத்தை கடமையாக்கில் மூன்று தத்துவங்கள் இருக்கின்றன:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

  1. அல்லாஹ் செல்வந்தனை சோதிக்கிறான், இவன் தனக்காக வாழ்கிறானா? தன் சொல்படி வாழ்கிறானா? وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ உ حُبِّهِ உடைய ضمير அல்லாஹ் என முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் அவர்கள் மஆரிபுல் குர் ஆனில் கூறுகிறார். அப்படியானால் அல்லாஹ்வின் மீதான நேசத்தில் தர்மம் செய்பவர் என்று பொருள்.
  2.  இதயத்தில் கஞ்சத்தனம் பேராசை படியாமல் பாதுகாக்கிறது.
  3.  சமூகத்தில் ஏழை பணக்காரகளுக்கிடையே அமைதி நிலவுகிறது.

உள்ளார்த்தமாக ஜகாத் கொடுப்பவர்களுக்கு இந்த மூன்று வகையான நனமைகள் கிடைக்கின்றன. அத்தோடு சமுதாயமும் நனமை அடைகிறது.

ரமலானின் இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்படுகிற முக்கியமான ஒரு கடமை ஜகாத் ஆகும்.

ரமலானில் நிறைவேற்றினால் அதிக நன்மை கிடைக்கும் என்பதால் ரமலானில் நிறைவேற்றுகிறோம். எப்பபோது கடமையாகிறதோ அப்போது ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்.

அதே போல ரமலானில் கொடுக்காவிட்டால் ரமலான் முடிந்த பிறகு ஜகாத்தை நிறைவேற்றிட வேண்டும். சிலர் இந்த ரமலானில் கொடுக்க இயலாவிட்டால் அடுத்த ரமலானில் தான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அது தவறு.

அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாமல் வைக்கப்படுகிற சொத்து எப்படி கருப்பு பணமாகிறதோ அது போல ஜகாத் நிறைவேற்றப்படாத சொத்து நாம் பதுக்க்கப்பட்ட சொத்தாகிவிடும்.

[குர்ஆன் எச்சரிக்கிறது:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

يَّومَ يُحْمٰى عَلَيْهَا فِىْ نَارِ جَهَـنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ‌ؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). [9:35]

[யார் மீது கடமை:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

அடிப்படை தேவைகள், கடன், எல்லாம் போக மேலதிகமாக ஒருவரிடம் 84 கிராம் தங்கம் (10½ பவுன்) அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் அதற்கு முழுமையாக ஜகாத் கொடுக்க வேண்டும். (இன்றைய 03/04/2023) விலைப்படி 10½ பவுனின் விலை 4,62,384 ரூபாய்கள் ஆகும்.

சுமார் 612 கிராம் வெள்ளிக்கு நிகரான தொகை சுமார் 47,120 ஆயிரம்ரூபாய் கையிருப்பில் வைத்திருப்பவர் மீது ஜகாத் கடைமையாகும்.

தங்களிடம் இருக்கும் மொத்த தொகையை / நகையை 40 ஆல் வகுத்தால் ஈவு என்ன கிடைக்குமோ அந்த தொகையை ஜகாத்தாக நிறைவேற்றிட வேண்டும்.

[ரமலானில் ரகசிய தர்மம்:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ‏.‏

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்’ [ஸஹிஹ் புஹாரி 6]

தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமையின் அர்ஷின்) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அதில் ஒருவன்

وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّي لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்தவன். புகாரி – 6806, 1423.

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: قَالَ رَجُلٌ: لَأَ تَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِيْ يَدِ سَارِقٍ، فَأَصْبَحُوْا يَتَحَدَّثُوْنَ: تُصُدِّقَ عَلي سَارِقٍ، فَقَالَ: اَللّهُمَّ لَكَ الْحَمْدُ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِيْ يَدِ زَانِيَةٍ، فَأَصْبَحُوْا يَتَحَدَّثُوْنَ: تُصُدِّقَ اللَّيْلَةَ عَلي زَانِيَةٍ، فَقَالَ: اَللّهُمَّ لَكَ الْحَمْدُ، عَلي زَانِيَةٍ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِيْ يَدِ غَنِيٍّ، فَاَصْبَحُوْا يَتَحَدَّثُوْنَ: تُصُدِّقَ عَلي غَنِيٍّ، فَقَالَ: اَللّهُمَّ لَكَ الْحَمْدُ عَلي سَارِقٍ، وَعَلي زَانِيَةٍ، وَعَلي غَنِيٍّ، فَاُتِيَ فَقِيْلَ لَهُ: اَمَّا صَدَقَتُكَ عَلي سَارِقٍ فَلَعَلَّهُ اَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِهِ، وَاَمَّا الزّانِيَةُ فَلَعَلَّهَا اَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا، وَاَمَّا الْغَنِيُّ فَلَعَلَّهُ اَنْ يَعْتَبِرَ، فَيُنْفِقَ مِمَّا اَعْطَاهُ اللهُ.

(பனீ இஸ்ராயிலைச் சேர்ந்த) ஒரு மனிதர் (இன்று இரவு இரகசியமாக நான்) தர்மம் செய்வேன்’ என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டார். அவ்வாறே, இரவில் ஸதகாப் பொருளை எடுத்துக் கொண்டு வெளியேறினார், விவரம் அறியாமல் இரகசியமாக ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். (நேற்றிரவு) திருடனுக்கு ஸதகா கொடுக்கப்பட்டுள்ளது’ என்று மறுநாள் காலையில் மக்களிடையே (பேசப்பட்டது) ஸதகாச் செய்தவர். யா அல்லாஹ்!, (திருடனுக்கு ஸதகா போய்ச் சேர்ந்ததற்கும்) உனக்கே புகழ் அனைத்தும்! (இல்லையென்றால் அவனைவிடவும் கெட்ட மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?) என்று சொன்னார். பிறகு, அவர் முந்திய ஸதகா வீணாகிவிட்டது, இன்று இரவு(ம்) ஸதகா செய்வேன்” என உறுதி கொண்டார். அதன்படியே இரவில் ஸதகாப் பொருளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். (விபரம் அறியாமல்) ஒரு விபச்சாரிக்கு அந்த ஸதகாவைக் கொடுத்துவிட்டார். நேற்றிரவு விபச்சாரிக்கு ஸதகா கொடுக்கப்பட்டுள்ளது’ என மறுநாள் காலையில் மக்களுக்கிடையே பேசப்பட்டது. யா அல்லாஹ்! விபச்சாரிக்கு (ஸதகா போய்ச் சேர்ந்ததில்) உனக்கே புகழ் அனைத்தும்” (என்னுடைய பொருள் அதற்கும் தகுதியானதல்லவே!) என்று கூறினார். பிறகு (மூன்றாம் முறையாக) இன்று இரவு அவசியம் ஸதகாச் செய்வேன்” என்று உறுதி கொண்டார். அவ்வாறே, இரவில் ஸதகாப் பொருளை எடுத்துக்கொண்டு புறப்பட்டவர், அதை ஒரு பணக்காரனுடைய கையில் கொடுத்துவிட்டார். நேற்றிரவு செல்வந்தருக்கு ஸதகா கொடுக்கப்பட்டிருக்கிறது’ என மறுநாள் காலையில் மக்களுக்கிடையே பேசப்பட்டது. ஸதகாக் கொடுத்தவர், யா அல்லாஹ்! திருடன், விபச்சாரி, செல்வந்தர் ஆகியோருக்கு ஸதகாவைச் சேர்த்ததற்கு, உனக்கே புகழ் யாவும்! (என் பொருள் இத்தகையவர்களுக்குக் கொடுக்கவும் தகுதியற்றது) எனக் கூறினார். அவருக்கு கனவில், (உன்னுடைய ஸதகா ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது) திருடனுக்கு உனது ஸதகா(வை கொடுக்க வைத்ததின் காரணம்) அவன் திருந்தி தவ்பாச் செய்து திருட்டை விட்டுவிடலாம் என்பதற்காகவே! விபச்சாரிக்கு, அவள் விபச்சாரத்திலிருந்து தவ்பா செய்துவிடலாம். விபச்சாரம் செய்யாமலும் நமக்கு அல்லாஹுதஆலா கொடுத்திருக்கிறான் என்பதைப் பார்த்து அவளுக்கு ரோஷம் வரும் என்பதற்காக ஸதகாவை கொடுக்க வைக்கப் பட்டது. செல்வந்தருக்கு அவர் (அல்லாஹுதஆலாவின் அடியார்கள் எவ்வாறெல்லாம் ரகசியமாக ஸதகாச் செய்கிறார்கள் என்ற) படிப்பினை பெற்று, அல்லாஹுதஆலா தனக்குக் கொடுத்த பொருளிலிருந்து அவரும் (அல்லாஹுதஆலாவின் பாதையில்) செலவு செய்யலாம் என்பதற்காக ஸதகாவைக் கொடுக்கவைக்கப்பட்டது” என சொல்லப்பட்டது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [ஸுனன் நஸாயீ 2523]

 الصدقةُ تُطفئُ الخطيئةَ كما يُطفئُ الماءُ النارَ.

தண்ணீர் நெருப்பை அணைத்துவிடுவது போல ரகசிய தர்மம் பாவத்தை அழித்துவிடுகிறது.

عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: صَدَقَةُ السِّرِّ تُطْفِيءُ غَضَبَ الرَّبِّ. » [صحيح الترغيب]

ரகசிய தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடுகிறது. துர்மரணத்தைத் தடுத்துவிடுகிறது.

[இரு மடங்கு கூலி:-]

✍🏻 அன்புள்ளவர்களே! நமது உறவினர்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களை இழிவாகக் கருதாமல் அவர்களிடம் உறவைப் பேணி, அவர்களுக்குத் தர்மம் செய்தால் அதற்கு இரு மடங்கு கூலி கிடைக்கும்.

நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேனே! அறிவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (விடுதலை) செய்து விட்டாயா?” என்று கேட்க, நான், "ஆம்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்” என்று கூறினார்கள். புகாரி 2592

وأَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَتْبَعُ الْمَيِّتَ ثَلاَثَةٌ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ فَيَرْجِعُ اثْنَانِ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى وَاحِدٌ عَمَلُهُ.‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏‏‏.‏

ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனுடைய செயல்பாடு நின்று விடுகின்றது. மூன்று விஷயங்களை தவிர. 1. நிலையான தர்மம், 2. பயனளிக்கக் கூடிய கல்வி, 3. அவருக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை. முஸ்லிம் 1631

இன்னும் ஏராளமான நன்மைகள் தர்மத்தின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. சிறு துளி பெரு வெள்ளமாக ஆவதைப் போன்று நம்மால் முடிந்த சிறு சிறு தர்மங்களைச் செய்து அதிகமான நன்மைகளைப் பெற அல்லாஹ் அருள் செய்வானாக!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் உடனே, அவர்கள் எழுவார்கள் (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும். (புகாரி) என்று நபிகளார் கூறினார்கள்.

கருணை உள்ளம் கொண்ட இறைவனே ! உன் அளவில்லா கருணையை எங்கள் மீதும் பொழிந்து உன் மன்னிப்பை மட்டுமே ஆதரவு வைத்துள்ள எங்களின் குற்றம் குறைகளை மன்னித்து நோன்பாளிகளான எங்கள் அனைவர்களையும் ரய்யான் என்ற வாசல் வழியாக சுவர்க்கத்தில் சேர்த்து விடுவாயாக ஆமீன். வஸ்ஸலாம்.

【 சபதம் எடுங்கள்…】

✍🏻 அன்புள்ளவர்களேமேற் சொன்னவாறு ரமலான் மாதத்தின் 30 நாட்களிலும், நோன்பு எனும் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிற‌ நான் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவராக ஆகுவோன். என்று. அல்லாஹ் ﷻ  அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக‌ தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன். وآخر دعوانا أن الحمد لله رب العالمين

🏻🏻நன்றியுரை:-  تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا  ويشرح صدورنا

 “‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.

எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இக்குறிப்புரை வெளி வர உதவி செய்த‌  அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும், பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹு கைரா.

" ஆக‌ ந‌ம் நோன்பினை அலங்கரிப்போம்!! ஆரோக்கியமா{க்]குவோம்!!! வல்ல நாயகன் அருள்புரிவானாக! ஆமீன்.… " 

வஸ்ஸலாம் 

இக்குறிப்புரையின் தலைமையாசிரியர் & இக்குழு கண்காணிப்பாளர்:-

உங்களின் துஆக்களை பெற பேராசைப்படும்:-11

உஸ்தாதுனா எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா. வாசுதேவநல்லூரி. செல் +917402127136 & ٩٩٤٢٤٠٧٣٥٨ நான்  விவசாயி..

மெளலானா ஹாபிழ் களந்தை.B. அபு அஜ்மல் புகாரி யூசுபிஉதவியாசிரியர்:-

உஸ்தாதுனா மெளலானா ஹாபிழ் களந்தை B. அபு அஜ்மல் புகாரி யூசுபி. செல் +918754089943. 

ஜுமுஆ பேருரையின் பயன்பாற்றிற்காக மட்டுமே இக்குறிப்புரை தரப்படுகின்றன, இவற்றை  அனுமதி இல்லாமல் மறு பிரசுரம் செய்யலாகாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானது.

உங்களுக்கு பிடித்த தலைப்பில் PDF வடிவில் பயான் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய..

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

********** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين ************

✍🏻✍🏻  நன்றியுரை :-  ✍🏻✍🏻

எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

இக்குறிப்புரை வெளி வர உதவி செய்த‌  அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும், பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹு கைரா.

உங்களுக்கு பிடித்த தலைப்பில் PDF வடிவில் பயான் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய..

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

********** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين ************

 

உங்களுக்கு பிடித்த தலைப்பில் PDF வடிவில் பயான் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய..

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

********** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين ************

வஸ்ஸலாம் https://vellimedaikal.wordpress.com/2021/03/15/10284/

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

மே-2019-03-ந் தேதி. ஹிஜ்ரி-1440- ஷஃபான்-27-ந் தேதி நான்காம் வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை. வெளியீட்டு எண்: 065.

அடுத்தாக நாளை முதல் மூன்றாம் பத்து ஆரம்பமாக உள்ளதால் நரகத்திலிருந்து பாதுகாவல் தேடுதல், சுவனத்தை வேண்டுதலான    اللهم أعتقنا من النار و أدخلنا الجنة يا رب العالمين  பிரார்தனையை அதிகமாக செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

http://www.smhowsee.blogspot.in/

ஜஜாக்கல்லஹு கைரா. - அல்ஹம்துலில்லாஹ்

நன்றி மீண்டும் வருக எனக்கு துஆ செயுங்கள்

அஸ்ஸலாமுஅலைக்கும்வரஹ்மதுல்லாஹிவபரகாதுஹு.