பக்கங்கள்

بسم الله الرحمن الرحيم الحمدلله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته بارك الله بكم و سدد خطاكم

அன்பு நண்பர்களுக்கு.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. எனக்கு மிக்க மகிழ்ட்சி நீங்கள் என் இணையதளத்திர்க்கு வந்ததற்கு - அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்

மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்
மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

நினைவுயாவும் உங்கள் மீது யா ரசூலல்லாஹ்


நினைவுயாவும் உங்கள் மீது யா ரசூலல்லாஹ்
நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ்
அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி
அகில மெங்கும் ஒளிதெளித்த யா ரசூலல்லாஹ்
         (-நினைவு)

மதீனா நகர்க் கொருநாள் நான்வருவேன்
மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
நதியென அருட்கடலில் நான் விழுவேன்
நபியே கதியென்றங்கு நான் அழுவேன்
எந்தன் மீது உங்கள் பார்வை பட்டநேரமே
பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே !
                (-நினைவு)

காணும் வரையில் கண்கள் தூங்காது !
காதலில் எந்த நெஞ்சம் ஏங்காது !
வானில்லாமல் நிலம் வாழாது
வாடல் தொடர உள்ளம் தாங்காது !
ஒளியைத் தேடும் விட்டிலாக நானும் மாறுவேன்
உம்மத்தென்ற பெருமையோடு வந்து சேருவேன் !
                 (-நினைவு)

உலகில் வாழவந்த உயிர்கள் யாவும்
உம்மி ரசூலே உங்கள் புகழ்பாடும் !
அருளாய் வந்திலங்கும் மறைமூலம்
அல்லாஹு போற்றும் மனித அனுகூலம் !
இரண்டு வாழ்வின் பொருளைச் சொன்ன இதயதீபமே
இறுதித் தூதராகவந்த இறையின் ஞானமே !
          (-நினைவு)

http://www.smhowsee.blogspot.in/

ஜஜாக்கல்லஹு கைரா. - அல்ஹம்துலில்லாஹ்

நன்றி மீண்டும் வருக எனக்கு துஆ செயுங்கள்

அஸ்ஸலாமுஅலைக்கும்வரஹ்மதுல்லாஹிவபரகாதுஹு.